தாய்மண்ணே!
செந்நீராய் வடித்தேன்
என் கண்ணீரை
வெந்நீராய் உதிர்ந்த என் விழிநீரை
மண்ணிலே மடிவதாய் நினைந்து
உன் மடியிலே துவண்டேன்
துவண்ட இடம் உழுத களமாக
உதிர்ந்த நீர் ஊற்றாக
விதையாக
உழுதுவண்டு நீர் வடித்து
உன் மடியென்று மறந்தேன்
வளர்த்துவிட்டாய் அம்மா
என் மனமுதிர்ச்சியில்
என் தாய்!
Comments
Post a Comment